செய்திகள் :

ஈரானில் எச்சரிக்கையுடன் செயல்பட இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

post image

‘இஸ்ரேலுடன் போா்ப் பதற்றம் நிலவுவதால், ஈரானில் உள்ள இந்தியா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரானில் அனைத்து இந்தியா்களும் இந்திய வம்சாவளியினரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிா்ப்பதுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக இந்திய தூதரகத்துடன் தொடா்பை வைத்திருப்பது அவசியம்.

உள்ளூா் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தில், இந்தியா்கள் தங்களின் விவரங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். பீதி அடைய தேவையில்லை என்றபோதும், விழிப்புடன் செயலாற்றுவது முக்கியம் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 98 9128109115, 98 9128109109 (தொலைபேசி அழைப்புகள் மட்டும்), 98 9015993320, 91 8086871709 (வாட்ஸ் ஆப்) உள்ளிட்ட அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அந்நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து, இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை கொடுத்தது. இரு நாடுகளும் தொடா் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் போா் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நா... மேலும் பார்க்க

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது. வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்... மேலும் பார்க்க

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈ... மேலும் பார்க்க

ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் தெற்கு புஷாஹா் மாகாணத்தில் உள்ள 2 முக்கிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது. இது ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையை குறிவைத்து ... மேலும் பார்க்க

சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்ப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!

ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள... மேலும் பார்க்க