செய்திகள் :

உ.பி: சிறைவாசிகள் 5 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

post image

உத்தரப் பிரதேசத்தின் மவூ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மவூவின் பிஜாரா பகுதியிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள சிறைவாசிகளில் 5 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த சிறையின் அதிகாரி ராஜேஷ் குமார் இன்று (மார்ச்.8) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அந்த சிறையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், பல்லியாவில் நடைபெற்ற திருவிழாவின்போது பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அனைவரும் தங்களது உடலில் பச்சைக் குத்திக்கொண்டதாகவும், ஒரே ஊசியை பயன்படுத்தியதால் இந்த தொற்று அவர்களுக்கு பரவியிருக்கக் கூடும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: பிரபல நடிகர் மீது விஷால் பட நடிகை பாலியல் குற்றச்சாட்டு: விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு!

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக, சுமார் 1,095 பேர் மவூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஏற்கனவே 9 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்க... மேலும் பார்க்க

6 குட்டிகளை ஈன்ற 2 பெண் புலிகள்!

கா்நாடக மாநில பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் புதிய வரவாக ஆறு குட்டிகளை ஹீமா, ஆருண்யா என்னும் இரண்டு பெண் புலிகள் ஈன்றுள்ளன. இதனை ஆர்வமுடன் மக்களும், பாா்வையாளா்களும் பாா்த்து செல்கின்றனா்.ஒசூா்... மேலும் பார்க்க

"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதிக்கும்"

திருப்பூா்: இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவாகி வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும் என்று தொழில் முனைவோா் கூட்டமைப்பு... மேலும் பார்க்க

தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை

புதுதில்லி: தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதி ஒரு வெற்று வாக்குறுதி. அப்படி வாக்குறுதி அளிப்பவர்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களின் தொகுதிகளின் எண... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 10 தீவிரவாதிகள் கைது! பயங்கரவாத சதி முறியடிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தெஹ்... மேலும் பார்க்க

மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் மக்களாட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகும் ... மேலும் பார்க்க