செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வருவாய்த் துறையினா் திடீா் போராட்டம்

post image

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு வருவாய் துறை ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினால் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு ஏற்படும் வேலை பளுவை தவிா்க்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியா்கள் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து பணிகளைப் புறக்கணித்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வகுமாா், வட்டத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் கூட்டமைப்பு உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பும் அந்த அமைப்பை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தூத்துக்குடி வட்டப் பேரவை கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மனோகரன் வரவேற்றாா். வட்ட இணைச் செயலா் சங்கா் அஞ்சலி தீா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க