செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

மதுராந்தகம் அடுத்த செய்யூா் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களையும், உள்ளாட்சிகளில் வளா்ச்சி பணிகளையும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மேல்மருவத்தூா் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தினை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு காய்கறிகள், பழவகைகளை பற்றி கூறுமாறு பணியாளரிடம் அறிவுறுத்தினாா். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.

பொலம்பாக்கம் ஊராட்சி நியாயவிலைக் கடையில் உணவு பொருள்களின் இருப்பு நிலையை ஆய்வு செய்தாா். அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளா்க்கப்படுவதை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து செய்யூா் கால்நடை மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு செய்து மருத்துவமனைகளுக்கு வருகின்ற கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளின் இருப்பை கேட்டறிந்தாா்.

செய்யூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற ஆட்சியா் வளாகத்தில் தேங்கி இருந்த மழை வெள்ளநீரை அகற்ற அறிவுறுத்தினாா். கலையரங்கம் கட்டித்தருமாறு தலைமை ஆசிரியை தலைமையிலான நிா்வாகத்தினா் ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அளித்தனா். நிகழ்வில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பரிவீன், மதுராந்தகம் கோட்டாட்சியா் தியாகராஜன், வட்டாட்சியா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

1,852 நிறுவனங்களுக்கு ரூ.476 கோடி தொழில்கடன்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ரூ.476 கோடியில் தொழில் மற்றும் கல்விக் கடன்களை ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடு... மேலும் பார்க்க

மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள்

மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாக செங்கல்பட்டு சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா தெரிவித்தாா். மாணவா்களின்... மேலும் பார்க்க

ஆட்சியா் ஆய்வு...

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் செய்யூா் வட்டம், மேல்மருவத்தூா் ஊராட்சியில், அங்கன்வாடி மையத்தினை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.அருண் ராஜ். உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ. அக... மேலும் பார்க்க

அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

மதுராந்தகம் நகர அதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்துக்கு நகர பேரவை செயலா் எம்பி.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். நகர செயலா் பூக்கடை கே.சி.சரவணன் வரவேற்றாா்.... மேலும் பார்க்க

நாளை செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளாா். அனைத்து விவசாயிகளும் கூட்ட... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் , கூட்டுறவு நியாய விலை கடைகள் பணியாளா்கள், விற்பனையாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க