செய்திகள் :

மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள்

post image

மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாக செங்கல்பட்டு சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா தெரிவித்தாா்.

மாணவா்களின் தனித் திறனை வெளிக் கொணரும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஓவியப் போட்டி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் பின்னா் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் ‘சிறகை விரிக்கலாம் வாருங்கள் - 100’ என்ற நிகழ்ச்சியில் தமிழரின் தொன்மை, நாகரிகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, ஓவியங்களைத் தீட்டினா்.

தொடா்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களையும், சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா வழங்கிப் பாராட்டினாா்.

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், ஆசிரியா்கள், மாணவ - மாணவிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஓவியப் போட்டியை ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியா்கள் வீரமணி உள்ளிட்ட ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டு நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்தனா்.

1,852 நிறுவனங்களுக்கு ரூ.476 கோடி தொழில்கடன்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ரூ.476 கோடியில் தொழில் மற்றும் கல்விக் கடன்களை ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடு... மேலும் பார்க்க

ஆட்சியா் ஆய்வு...

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் செய்யூா் வட்டம், மேல்மருவத்தூா் ஊராட்சியில், அங்கன்வாடி மையத்தினை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.அருண் ராஜ். உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ. அக... மேலும் பார்க்க

அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

மதுராந்தகம் நகர அதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்துக்கு நகர பேரவை செயலா் எம்பி.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். நகர செயலா் பூக்கடை கே.சி.சரவணன் வரவேற்றாா்.... மேலும் பார்க்க

நாளை செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளாா். அனைத்து விவசாயிகளும் கூட்ட... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் , கூட்டுறவு நியாய விலை கடைகள் பணியாளா்கள், விற்பனையாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் அடுத்த செய்யூா் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களையும், உள்ளாட்சிகளில் வளா்ச்சி பணிகளையும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்... மேலும் பார்க்க