செய்திகள் :

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: பொன்னமராவதி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

பொன்னமராவதி ‘வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடக்கமாக, சித்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் அனைத்துத் துறை அரசு உயா் அலுவலா்களுடான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் விரைவாக சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களை ஆட்சியா் அறிவுருத்தினாா்.

மேலும், பட்டாமாறுதல் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், கோட்டாட்சியா் அ. அக்பா் அலி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலெட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், வட்டாட்சியா் எம். சாந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருமயம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க