செய்திகள் :

`உங்கள் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது..!' - கேள்வி கேட்ட விவசாயி; கடுப்பான எடப்பாடி பழனிசாமி!

post image

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“திராவிட மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் ஆகிவிட்டது.” என்று விமர்சனம் செய்திருந்தார். இன்று அவர் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

முன்னதாக பொள்ளாச்சி தனியார் ஹோட்டலில் விவசாயிகள், தொழில் அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கள் இறக்குவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு விவசாயி,

எடப்பாடி பழனிசாமி

“நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் கள் இறக்க அனுமதி கொடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அங்கிருந்து அதிமுக நிர்வாகிகள், பௌன்சர்கள், பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி ஆகியோர் விவசாயியை  சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

விவசாயி தொடர்ந்து கேள்வி கேட்டதால் எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆனார்.ஒரு கட்டத்தில் அவர், “உங்கள் ஒருவரின் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது. இங்கு பொதுவாக தான் பேச வேண்டும். கோரிக்கை மட்டும் வையுங்கள். கருத்து சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் கூட்டம்

உங்களுக்கு கஷ்டம் இல்லை என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் மற்றவர்களின் மனம் புண்படக் கூடாது.” என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரப்பான சூழல் நிலவியது.  

நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

அண்டை நாடான நேபாளத்தில், இளைஞர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், நீதிமன்றம், பிரதமர் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது, தனியார் சொத்துகள் கலக... மேலும் பார்க்க

ராகுல் காந்தி வாகனம் நிறுத்தம்: "பாஜக-வின் அரசியல் பயங்கரவாதம்" - செல்வப்பெருந்தகை கண்டனம்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் (தனிப்பொறுப்பு) தினேஷ் பிரதாப் சிங், பாஜக-வினருடன் ... மேலும் பார்க்க

Kerala: காங்கிரஸ் நிர்வாகியை ஸ்டேஷனில் வைத்து தாக்கி பொய் வழக்கு; 4 போலீஸார் சஸ்பெண்ட்- நடந்ததென்ன?

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குன்னங்குளம் அருகே உள்ள செவ்வல்லூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுஜித். 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி செவ்வல்லூர் பகுதியில் குன்னங்குளம் காவல் நி... மேலும் பார்க்க

ராஜினாமா மனநிலையில் நயினார் நாகேந்திரன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துவிட்டு வந்ததில் தொடங்கி, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள கூட்டணிக் கட்சிகளை நயினார் நாகேந்திரன் சரியாக அரவணைக்கவில்லை' என்று... மேலும் பார்க்க

``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்" - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்யாவின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியா மற்றும் சீனா மீது 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெ... மேலும் பார்க்க

Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அமெரிக்கா கண்டனம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் செப்டம்பர் 8, 2025 அன்று, ஜெருசலமின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரமோட் சந்திப்பு (Ramot Junction) என்ற இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் ... மேலும் பார்க்க