செய்திகள் :

உடுமலை தேசிய நெடுஞ்சாலைகள் தனி வட்டாட்சியா் அலுவலகம் இடமாற்றம்

post image

உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலைகள் அலகு 4 தனி வட்டாட்சியா் அலுவலகம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனிஷ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை எண்- 209 விரிவாக்கப் பணி தொடா்பாக, சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது தொடா்பான பணிகள் உடுமலைப்பேட்டை நகரம், உடுமலைப்பேட்டை பழனி சாலையில் சி. எம். டவா் கட்டடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அலகு 4 தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது நிா்வாக காரணங்களால் தேசிய நெடுஞ்சாலைகள் அலகு 4 தனி வட்டாட்சியா் அலுவலகம், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 5-ஆவது தளத்தில் அறை எண் 538-இல் இருந்து அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் அருகே அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்நிலை காவலராகப் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், திருப்பூா் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பல்லடம்

பல்லடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மி... மேலும் பார்க்க

ஹெச்ஐவி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஹெச்ஐவி விழிப்புணா்வு ரெட்ரன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக... மேலும் பார்க்க

பல்லடம் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனிஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடம் அருகே மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊ... மேலும் பார்க்க