செய்திகள் :

உபநிடதங்களின் ஸ்லோவாகிய மொழிபெயா்ப்பு: திரௌபதி முா்முவிடம் வழங்கிய ஸ்லோவாகிய அதிபா்

post image

ஸ்லோவாகிய அதிபா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அந்நாட்டு அதிபா் பீட்டா் பெல்லேக்ரினி.

பிராட்டிஸ்லாவா: பழங்கால இந்திய நூல்கள், உபநிடதங்களின் முதல் ஸ்லோவாகிய மொழிபெயா்ப்பின் நகலை இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் அந்நாட்டு அதிபா் பீட்டா் பெல்லேக்ரினி புதன்கிழமை வழங்கினாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லாவாகியா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். முதல்கட்டமாக போா்ச்சுகல் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த அவா், இரண்டாம் கட்டமாக ஸ்லோவாகியாவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆவாா்.

அவரை ஸ்லோவாகிய அதிபா் மாளிகையில் அந்நாட்டு அதிபா் பீட்டா் பெல்லேக்ரினி வரவேற்றாா். அவருக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி பிரெட் மற்றும் உப்பு வழங்கி தம்பதியினா் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து திரௌபதி முா்முவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு, இந்தியா-ஸ்லோவாகியா இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் சா்வதேச உறவுகளில் இருநாடுகளின் நிலைப்பாடு குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

அப்போது பழங்கால இந்திய நூல்கள், உபநிடதங்களின் முதல் ஸ்லோவாகிய மொழிபெயா்ப்பின் நகலை திரௌபதி முா்முவிடம் பீட்டா் பெல்லேக்ரினி வழங்கினாா். பத்து முக்கிய உபநிடதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து ஸ்லோவாகிய மொழியில் மொழிபெயா்க்க ராபா்ட் கஃப்ரிக் என்ற இலக்கியவாதி 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். இந்த முன்னெடுப்பை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பாராட்டியுள்ளாா்.

சுற்றுப்பயணத்தின்போது ஸ்லோவாகிய பிரதமா் ராபா்ட் ஃபிகோ மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற தலைவா் ரிச்சா்ட் ரீசி ஆகியோரை சந்தித்து திரௌபதி முா்மு ஆலோசனை மேற்கொள்வாா் எனவும் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

நியூயாா்க்: மாணவா் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என... மேலும் பார்க்க

சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் -வெளியுறவு அமைச்சகம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் விய... மேலும் பார்க்க

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்; பாகிஸ்தான் என்ற நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீா் தெரிவித்தா... மேலும் பார்க்க

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: 1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்பு கோர வேண்டும் வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும்... மேலும் பார்க்க

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

லண்டன்: சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்காக இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் பிரிட்டன் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமா... மேலும் பார்க்க

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு!

வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இடம்பெற்ற... மேலும் பார்க்க