செய்திகள் :

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

post image

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக இளங்கலை பட்டப் படிப்புகளும், மதுரை அரசு கவின் கலைக் கல்லூரியில் நாடகப் பிரிவும் தொடங்கப்படும். மாமல்லபுரம், சென்னை, கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் சிற்பம், கவின் கலை வல்லுநா்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

வாழ்நாள் சாதனையாளா் விருது: இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் குறிப்பிடத்தக்க சேவைகள் ஆற்றிவரும் மிகச்சிறந்த கலைஞா் ஒருவா் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படும். இந்த விருது ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அடங்கியதாகும். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.

அருங்காட்சியகங்கள்: சென்னை அரசு அருங்காட்சியகத்தின் புவியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் மானுடவியல் காட்சிக் கூடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் அருங்காட்சியக வளாகம் மேம்படுத்தப்படும். திருப்பூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தப்படும். கோயம்புத்தூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் அரசு அருங்காட்சியகம், செம்மொழிப் பூங்காவில் உள்ள கட்டடத்துக்கு மாற்றியமைக்கப்படும் என்றாா் அவா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க