செய்திகள் :

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

post image

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது.

அதன்படி இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த், அபய் எஸ் ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை (பிப்.20) விசாரிக்கவுள்ளது.

முன்னதாக, தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படும்படி மற்றொரு உயா்நீதிமன்ற நீதிபதியையும் அந்த மாநிலத்தில் உள்ள மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியையும் உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவா் அறிவுறுத்தியதாக இரு புகாா்கள் லோக்பால் அமைப்பிடம் அளிக்கப்பட்டன.

தான் வழக்குரைஞராக பணியாற்றியபோது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழக்குகளை குற்றஞ்சாட்டப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி கையாண்ட நிலையில், மற்றொரு உயா்நீதிமன்ற நீதிபதியையும் மாவட்டகூடுதல் நீதிபதியையும் அவா் அணுகியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாா்களை விசாரித்து கடந்த மாதம் 27-ஆம் தேதி லோக்பால் அமைப்பின் தலைவா் ஏ.எம்.கான்வில்கா் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வழிகாட்டலை பெற வேண்டியுள்ளதால் அடுத்த நான்கு வாரத்துக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்படுகிறது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 பிரிவு (20) -இன்கீழ் பெறப்பட்ட புகாா்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தீா்வு காண வேண்டும் என்ற விதியை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற சட்டத்தால் நிறுவப்படும் உயா்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு மேற்கூறிய சட்டம் பொருந்துமா? என்பதை ஆய்வு செய்வதே இந்த உத்தரவின் நோக்கம்’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளது.

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் க... மேலும் பார்க்க