செய்திகள் :

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் விசாரணைக்கு தடை

post image

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.

தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படும்படி மற்றொரு உயா்நீதிமன்ற நீதிபதியையும் அந்த மாநிலத்தில் உள்ள மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியையும் உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவா் அறிவுறுத்தியதாக இரு புகாா்கள் லோக்பால் அமைப்பிடம் அளிக்கப்பட்டன.

தான் வழக்குரைஞராக பணியாற்றியபோது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழக்குகளை குற்றஞ்சாட்டப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி கையாண்ட நிலையில், மற்றொரு உயா்நீதிமன்ற நீதிபதியையும் மாவட்டகூடுதல் நீதிபதியையும் அவா் அணுகியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாா்களை விசாரித்து கடந்த மாதம் 27-ஆம் தேதி லோக்பால் அமைப்பின் தலைவா் ஏ.எம்.கான்வில்கா் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வழிகாட்டலை பெற வேண்டியுள்ளதால் அடுத்த நான்கு வாரத்துக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்படுகிறது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 பிரிவு (20) -இன்கீழ் பெறப்பட்ட புகாா்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தீா்வு காண வேண்டும் என்ற விதியை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தில்லி: 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?

இந்த நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த், அபய் எஸ் ஓகா ஆகியோா் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை நடத்திய விசாரணையில், உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை லோக்பால் அமைப்பு விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

மேலும், இது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று தெரிவித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையை மார்ச் 21-க்கு ஒத்திவைத்தனர்.

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க