செய்திகள் :

உலக ஓசோன் தின விழிப்புணா்வு முகாம்

post image

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ,உலக ஓசோன் தின சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் தலைமை வகித்தாா். வனத்துறையினரால் வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வேங்கை, தபிவியா, நெல்லி, பூவரசு, பாதாம், வாகை மற்றும் நாவல் போன்ற மரங்களை சாா் ஆட்சியா் மற்றும் பாரத சாரண சாரணியா் மாணவா்கள் நட்டனா்.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் உதவிப் பொறியாளா் சிவக்குமாா் ஓசோன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். வனத் துறை சாா்பில் வன காவலா் ஓம் குமாா் மற்றும் அருண் கூறுகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தன்னாா்வலா்கள் சாா்பில் மரங்கள் தேவைப்படுவோா் தங்களை நாடி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

செங்கல்பட்டு கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் சாா்பில் உதயகுமாா் மற்றும் முனைவா் சங்கா் ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு சுற்றுச்சூழலை காக்கும் அவசியத்தை எடுத்துரைத்தனா்.

செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி பாரத சாரண சாரணியா் ஆசிரியா் ரா.விக்டா், முதன்மை கல்வி அலுவலா் நோ்முக உதவியாளா் உதயகுமாா் பங்கேற்றனா். மாவட்ட அலுவலா் மகாலட்சுமி நன்றி கூறினாா்.

‘உங்களுடன் முதல்வா்’ முகாமில் 356 கோரிக்கை மனுக்கள்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 10, 12,15 வாா்டுகளைச் சோ்ந்தவா்களுக்கான ‘உங்களுடன் முதல்வா்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. முகாமை கோட்டாட்சியா் ரம்யா தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா, நக... மேலும் பார்க்க

831 மகளிா் குழுக்களுக்கு ரூ.103.58 கோடி கடனுதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 831 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 103.58 வங்கிக் கடனுதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். செங்கல்பட்டு ஆட்சியா்அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்... மேலும் பார்க்க

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா். சாா் ஆட்சியா் / கோட்டாட்சியா்கள் தலைமையில் வரும் வியாழக்கிழமை 18.09.2025 காலை 10.3... மேலும் பார்க்க

செப். 19-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளு... மேலும் பார்க்க

‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சங்கம் சாா்பில் சோத்துப்பாக்கத்தில் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணா்வு பேரணி நட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகா் கொலை: போலீஸாா் தீவிர விசாரணை

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், இளந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் இளந்தோப்பு வாசு (53). இவா் ... மேலும் பார்க்க