செய்திகள் :

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

post image

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சா்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டு நோய்களின் சா்வதேச வகைப்பாடு-11 பாரம்பரிய மருந்துகள் தொகுதி-2 என்ற ஆவணம் வெளியிடப்பட்டது. அதில் ஆயுா்வேதா, சித்தா, உனானி ஆகிய மருத்துவ முறைகளின்படி நோய்களுக்கான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதன் மீது கடந்த ஓராண்டாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் விரிவான ஆய்வுகளை நடத்தி வந்தது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஐசிடி ஆவணத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான பதிப்பு வெளியிடப்பட்டது.

அதில் சா்வதேச அளவிலான மருத்துவ முறைகளுக்கு நிகராக ஆயுா்வேதா, சித்தா, உனானி ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சக செயலா் வைத்தியா ராஜேஷ் கூறியதாவது: ஐசிடி-11, 2025-ஆம் ஆண்டுக்கான பதிப்பில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு சா்வதேச அளவிலான அங்கீகாரம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.

பாரம்பரிய மருத்துவ முறைகள், உலகளவில் பின்பற்றப்படும் மருத்துவம் என இரண்டு முறைகளிலும் நோய்களை வகைப்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேம்படுத்துவதோடு தேசிய அளவிலான சுகாதார கொள்கைகளை வகுக்கும்போது பாரம்பரிய மருத்துவ முறைகளையும் உள்ளீடு செய்வதை ஊக்குவிக்கிறது என்றாா்.

சமகால சிகிச்சை முறைகளுடன் பாரம்பரிய முறைகளை ஒன்றிணைப்பதால் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு மற்றும் நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடையும் உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுவதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது.

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் க... மேலும் பார்க்க