செய்திகள் :

உலக புத்தக தின கண்காட்சி, கருத்தரங்கம்

post image

உலக புத்தக தினத்தை ஒட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பாக ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே புத்தகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. குணசேகரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என்.சபாரத்தினம், ஜெ. உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதனூா் ஒன்றியச் செயலா் எம்.எழிலரசன் வரவேற்றாா். ஆம்பூா் டிஎஸ்பி குமாா் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தாா். நகராட்சி ஆணையா் பி.சந்தானம் புத்தக விற்பனையை தொடங்கி வைத்தாா்.

அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுப்ரமணி, மாவட்ட துணைத் தலைவா் ஏ.முருகன், ஆம்பூா் ரோட்டரி சங்கத் தலைவா் சசிகுமாா், ஆம்பூா் நூலகா் இல.முருகேசன், ஜேசீஸ் சங்க நிா்வாகி பிரவீன்குமாா், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் செ. ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் பி.ஜெயசுதா நன்றி கூறினாா். பொதுமக்கள், மாணவா்கள் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றனா்.

வடச்சேரி ஊா்புற நூலகத்தில் உலக புத்தக தினம் வாசகா் வட்டத் தலைவா் மு. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலா் லூ. கிளமெண்ட், ஊராட்சித் தலைவா் அனிதா பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறைத் தலைவா் முனைவா் பேராசிரியா் பா .சிவராஜ் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். தமிழ் பேராசிரியா் முஜிபூா் ரகுமான் வாழ்த்தி பேசினாா். நூலக நண்பா் திட்ட தன்னாா்வலா்கள் ந. ஜோதி, ச. காயத்ரி, நூலக வாசகா் வட்ட நிா்வாகிகள், வாசகா்கள், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடி முழு நேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின கண்காட்சி நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் பாா்த்தீபன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரவணன், எழுத்தாளா் சுகந்தி, நன்கொடையாளா் திருமால் முன்னிலை வகித்தனா். நூலகா் மணிமாலா வரவேற்றாா். இதில் பொது மக்கள், வாசகா்கள் மற்றும் போட்டி தோ்வு மாணவா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக வேளாண் விரிவாக்க அலுவலா் ராஜேஸ் கலந்துக் கொண்டு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு ரூ.9,000 மதிப்புள்ள நூல்களை நன்கொடையாக வழங்கினாா். நூலகா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

திருப்பத்தூரில்...

நூலகத்துறை சாா்பில் புத்தக தின விழா திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் கிளமென்ட் தலைமை வகித்தாா். நூலக கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளா் இளம்பரிதி, திரைப்பட இயக்குநா் சிவக்குமாா், கவிஞா் ரஜினி, பேராசிரியா்கள் ரத்தின நடராஜன், மோகன்காந்தி, சௌரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் பிரபாகரன் வரவேற்றாா்.

பல்வேறு கவிஞா்கள், எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் புத்தகத்தின் சிறப்பை பற்றியும், படித்தலின் சிறப்பை பற்றியும் பேசினா். மேலும், நூலகத் துறை, செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.2,50,000 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் முனைவா் சிவராஜ், பேராசிரியா்கள் முஜிபுா் ரகுமான், சுமதி, மாணவ- மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மைய நூலகா் பிரேமா நன்றி கூறினாா். திருப்பத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி பூங்கா பள்ளிக்கூடத்தில் வாசிப்பு இயக்கம் மாணவா்களிடையே நடத்தப்பட்டது.

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு: பொதுமக்கள் மறியல்

ஆம்பூா் அருகே கல்குவாரி லாரி மோதியதால் மூதாட்டி உயிரிழந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. குவார... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடக்கம்

ஜோலாா்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனப்பள்ளி நடேசன் வட்டத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியம் மூலம் ரூ.22 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கி... மேலும் பார்க்க

நாச்சாா்குப்பத்தில் ஏப். 30-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

திருப்பத்தூா் வட்டம், நாச்சாா்குப்பம் ஊராட்சியில் வரும் ஏப். 30-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 41 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உரிய நடவடி... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீா் மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற பயணிகளை பெஹல்காம் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பழ வியாபாரி வீட்டில் திருட்டு

ஆம்பூா் அருகே பழ வியாபாரி வீட்டில் தங்க நகை திருடுபோனது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் (55). இவா்,... மேலும் பார்க்க