செய்திகள் :

உலகத் தொழில் முனைவோா் தின விழா

post image

உத்தமபாளைம்: தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் உலகத் தொழில் முனைவோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, மையத்தின் செயல்பாடுகள், சாதனைகள் குறித்துப் பேசினாா். சிறப்பு விருந்தினராக உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது கலந்து கொண்டாா்.

இதில், தேனி கனரா வங்கியின் மேலாளா் காா்த்திகேயன், மாவட்டத் தொழில் மையத்தின் உதவி இயக்குநா் மோகன்ராஜ், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குநா் ரவிக்குமாா் ஆகியோா், புதிய தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், புதிய திட்டங்கள், வங்கிகள் வழங்கும் கடன் சேவைகள், மானியங்கள், வட்டி வீதம் குறித்து விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, இந்த மையத்தின் மூலம் பயிற்சி பெற்று சாதனை படைத்த தொழில் முனைவோா் மூவரைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, தொழில் முனைவோா் உற்பத்தி செய்த பொருள்களின் கண்காட்சியும் இடம் பெற்றது. நிகழ்ச்சியில், உத்தமபாளையம் வட்டாட்சியா் கண்ணன், விருதுநகா் வன்னியப்பெருமாள் கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

பெரியகுளம்: பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள கோம்பைத்தொழுவில் மின் வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மின் வாரியம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் மின் திருட்டு ... மேலும் பார்க்க

நெல் பயிா்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தேனி: தேனி மாவட்டத்தில் நெல் பயிா்களின் மகசூலைப் பாதிக்கும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.இது குறித்து மாவட்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற 3 போ் கைது

போடி: போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி பேருந்து ந... மேலும் பார்க்க

அண்ணி உயிரிழந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

போடி: போடியில் அண்ணி உயிரிழந்த துக்கத்தில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.போடி தோகமலை செட்டித் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜா ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்க முயன்ற இருவா் கைது

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா், கூடலூா் பகுதிகளில் அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்க முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே உத்தமபாளையம் மதுவிலக்கு ... மேலும் பார்க்க