செய்திகள் :

எடப்பாடி அருகே வங்கதேசத்தவா் கைது

post image

எடப்பாடி அருகே சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்த வங்கதேசத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருப்பாளி, ராமக் கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (49). இவா் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இவரது செங்கல் சூளையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் அன்சாரி (40) என்பவா் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சோ்ந்துள்ளாா்.

அப்துல் அன்சாரி அடிக்கடி தனது கைப்பேசி மூலம் வங்கதேசத்தில் உள்ளவா்களை தொடா்பு கொண்டு பேசி வந்ததாகத் தெரிகிறது. இதனை அடுத்து அவரது நடவடிக்கைகளை கண்காணித்த பூலாம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமையன்று அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா் வங்கதேசத்தில் உள்ள காஷ்மீரி ஷாத்ஹரா மாவட்டம், ஷியாம்நகா் பகுதியைச் சோ்ந்த ஷபீா் ஷா்தாா் மகன் அசாத்சுமான் தப்லுவ் (38) என்பதும், அவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமான முறையில் மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறி, அங்கு இந்திய குடியுரிமை உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு போலியான ஆவணங்கள் மூலம் ஆதாா் உள்ளிட்ட அடையாள அட்டைகளைப் பெற்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரைக் கைது செய்த பூலாம்பட்டி போலீஸாா், சென்னை புழல் சிறைக்கு கொண்டுசென்றனா். மேலும் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வெளிநாட்டைச் சோ்ந்த வேறு யாரேனும் சட்டவிரோதமாக தங்கி உள்ளாா்களா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க