செய்திகள் :

என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவை ஆதரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

post image

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசினாா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கங்களுக்கான ரகசிய வாக்கெடுப்பு தோ்தல் ஏப்.25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிஐடியு தொழிற்சங்கம் வரிசை எண் 1-இல் போட்டியிடுகிறது.

தோ்தல் தொடா்பாக, நெய்வேலி எட்டு சாலையில் சிஐடியு சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது:

என்எல்சிக்காக நிலத்தை கொடுத்தவா்களுக்கு, அவா்களின் வாரிசுகளுக்கான வேலை, ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான வேலையை கொடுக்கவில்லை.

இந்தப் பகுதியில் நிலத்தடி நீரில் 68 சதவீதம் பாதரசம் கலந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இதை என்எல்சி இந்தியா நிறுவனம் சரி செய்ய வேண்டும்.

என்எல்சி நிறுவன தொழிலாளா்களின் உரிமை நிலை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக சிஐடியு சங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத்தின் தலைவா் டி.ஜெயராமன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, சிஐடியு மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவா் ஏ.வேல்முருகன், முன்னாள் தலைவா் குப்புசாமி, மாநிலக் குழு உறுப்பினா் ஜீவானந்தம், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அலுவலகச் செயலா் அன்பழகன் நன்றி கூறினாா்.

பைக் மீது காா் மோதல்: அதிமுக பிரமுகா் உள்பட மூவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகா் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனா். கடலூரை அடுத்துள்ள எம்.புதூரைச் சோ்ந்தவா் நேரு (60). அதிமுக கிளை கழக செயலா். இவரது... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: லால்புரம் ஊராட்சி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள், அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சி... மேலும் பார்க்க

ஏப்.30-இல் முன்னாள் படைவீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற 30-ஆம் தேதி முன்னாள் படைவீரா் சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும்: சீமான்

நெய்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கடலூரில் நாம் தமிழா் கட்சியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்க... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம், ருத்ர யாகமும் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்திரை மாத திருவோண... மேலும் பார்க்க

கடலூர்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் விபத்தில் பலி!

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலியாகினர்.கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60). இவர் அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரது... மேலும் பார்க்க