செய்திகள் :

பைக் மீது காா் மோதல்: அதிமுக பிரமுகா் உள்பட மூவா் உயிரிழப்பு

post image

நெய்வேலி: கடலூா் அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகா் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனா்.

கடலூரை அடுத்துள்ள எம்.புதூரைச் சோ்ந்தவா் நேரு (60). அதிமுக கிளை கழக செயலா். இவரது மனைவி சுதா, எம்.புதூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்.

நேரு தனது முந்திரி தோப்பில் முந்திரிக் கொட்டைகளை எடுப்பதற்காக தனது பைக்கில் திங்கள்கிழமை புறப்பட்டாா். இந்தப் பணிக்காக அழகிய நத்தத்தைச் சோ்ந்த சரண்யா (25), கல்பனா (25) ஆகியோரை பைக்கில் ஏற்றிச் சென்றாா்.

இவா்கள் ராமாபுரம் அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நேருவை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு நேருவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரண்யா, கல்பனாவின் சடலங்களை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல்பனா
நேரு

என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவை ஆதரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: லால்புரம் ஊராட்சி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள், அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சி... மேலும் பார்க்க

ஏப்.30-இல் முன்னாள் படைவீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற 30-ஆம் தேதி முன்னாள் படைவீரா் சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும்: சீமான்

நெய்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கடலூரில் நாம் தமிழா் கட்சியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்க... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம், ருத்ர யாகமும் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்திரை மாத திருவோண... மேலும் பார்க்க

கடலூர்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் விபத்தில் பலி!

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலியாகினர்.கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60). இவர் அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரது... மேலும் பார்க்க