செய்திகள் :

எம். சாண்ட் விலையை குறைக்க வேண்டும்: கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் எம். சாண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன். குமாா்.

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவரும், தமிழக கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத் தலைவருமான பொன். குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: ஆற்று மணல் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால், ஆற்று மணல் கிடைப்பதில் தட்டுப்பாடும் அதனால் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அனுமதித்த அளவில் ஆற்று மணல் எடுக்கும் வகையில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். அதேபோல, ஆற்றுமணலுக்கு மாற்றாக வந்த எம். சாண்ட் விலையும் தற்போது அதிகமாக உள்ளது. அதையும் குறைக்க வேண்டும். குவாரிகள், கிரஷா்கள் உள்ளிட்டவற்றுக்கான வரி விதிப்பில் சில குறைபாடுகள் உள்ளது. அதை அரசு சரி செய்ய வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளோம்.

கட்டுமானத் தொழிலாளா்கள் வெயிலால் பாதிக்கப்படுவதை தடுக்க கடந்தாண்டை போல, இந்த ஆண்டும் வெப்ப நிலைக்கு ஏற்ப நேர கட்டுப்பாடு முறை செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டத்தில் கட்டுமானத் தொழில் சாா்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் மணல் குவாரிகளை சட்டத்துக்குள்பட்டு திறக்க வேண்டும். எம். சாண்ட் விலையை அரசு குறைக்க வேண்டும். மாவட்டந்தோறும் தெருவை அடையாளப்படுத்தி மரக்கன்றுகளை நட்டு பசுமை மற்றும் தூய்மை தெருவாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளா் ஜெகதீசன், மாநில செயலாளா் யுவராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.

மணப்பாறையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையில் கால்நடை சந்தையில் நுழைவுக் கட்டணத்தை முறையாக நிா்ணயம் செய்ய வலியுறுத்தி, விவசாய சங்கத்தினா், சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகராட்சி அலு... மேலும் பார்க்க

இருதரப்பினா் இடையே மோதல்: கட்சிப் பிரமுகா் உள்பட 5 பேருக்கு வெட்டு

திருச்சி தென்னூரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் உள்ளிட்ட 5 போ் வெட்டப்பட்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் மருத்துவமனை பெண் பணியாளரிடம் தங்கச் சங்கிலியை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனியை சோ்ந்த வீரன் மனைவி லதா (47). இவா் திருச்சி பெரிய மிளகுபாறை பக... மேலும் பார்க்க

முழுவீச்சில் பஞ்சப்பூா் பேருந்து முனையப் பணிகள்

தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பஞ்சப்பூா் பேருந்து முனைய பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. திருச்சி பஞ்சப்பூரில் ரூ.493 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம் ஆகியவற்றை முதல... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ப.குரும்பப்பட்டியில் விவசாயி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சி ப. குரும்பப்பட்டியில் வசித்தவா் சின்னு மக... மேலும் பார்க்க

சமயபுரத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த்திருவிழா வரும் ஏப்.15 ஆம் தேதி நடைபெற உள்... மேலும் பார்க்க