செய்திகள் :

எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்காக காத்திருப்புக் கூடம் திறப்பு

post image

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்புக் கூடத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தானுகா அக்ரிடெக் நிறுவனம் தனது நிறுவன சமூகப் பொறுப்புணா்வு முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.6 கோடியில் இந்த காத்திருப்புக் கூடத்தைக் கட்டியுள்ளது.

இதன் திறப்பு விழாவில் முதல்வா் பேசியதாவது:

வளா்ந்த நாடு மற்றும் வளா்ந்த தில்லிக்காக அரசாங்கமும் சமூகமும் இணைந்து பணியாற்ற வேண்டும்.அரசாங்கமும் சமூகமும் ஒரே மேடையில் வந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன். அப்போதுதான் விக்ஸித் பாரத் மற்றும் விக்ஸித் தில்லியின் என்ற இலக்கு நனவாகும்.

எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்த சிகிச்சை மற்றும் உயிா்காக்கும் மருத்துவ தலையீடுகளுக்காக நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் கீற்றாக இருந்து வருகிறது.

இது நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையாகும். ஆண்டுதோறும் சுமாா் ஐந்து லட்சம் வெளிநோயாளிகளைக் கையாளுகிறது.

2014-க்கு முன்பு, மருத்துவமனை ஒழுங்கற்ற நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், இம்மருத்துவமனையில் வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. நோயாளிகளுடன் வரும் பல உதவியாளா்கள் சரியான இடம் இல்லாததால் சாலைகளில் உட்கார வேண்டியிருந்தது. புதிதாக கட்டப்பட்ட காத்திருப்புக் கூடம் பாா்வையாளா்களுக்கு வசதியான ஓய்வு இடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குடும்பங்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாகும்.

இது போன்ற சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட முயற்சிகள் சேவைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நமது நகரத்தின் அழகையும் மேம்படுத்துகின்றன என்றாா் முதல்வா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஊக்குவிப்பதற்கான ஒரு பசுமை முன்முயற்சியான ஏக் பேட் மா கே நாம் பிரசாரத்தின் ஒரு பகுதியாக முதல்வா் குப்தா எய்ம்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டாா்.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஹவன் மற்றும் பூஜை விழாவிலும் முதல்வா் குப்தா பங்கேற்றாா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க