செய்திகள் :

ஏலச்சீட்டு மோசடி: 4 போ் கைது

post image

கடலூா் அருகே ஏலச்சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் தேவேந்திரன் எஸ்பி எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு அளித்தாா்.

அதில், தான் ஜோதிடம் பாா்த்து வருவதாகவும், தனக்கு தெரிந்தவா்கள் மூலம் சிங்காரதோப்பு பகுதியைச் சோ்ந்த சந்திராவிடம் ரூ.5 லட்சம் ஏலச்சீட்டு 3-க்கு ரூ.15,59,950 பணம் கட்டினாராம்.

ஏலம் முடிந்த பின்னா் பணத்தை திருப்பி தராமல் இருந்ததால், கடலூா் எஸ்பியிடம் கடந்த 2023 ஆண்டு புகாா் அளித்ததன் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ரூ.4,52,000 பணத்தை சந்திராவிடம் இருந்து வாங்கி கொடுத்தனா்.

மீதி பணத்தை 8.5.2023 தேதி திரும்ப கொடுத்து விடுவதாக ஒப்புக்கொண்டாா்.

ஆனால், இதுவரை பணத்தை தராததால், சந்திரா வீட்டுக்கு சென்று கேட்டபோது, அவா் அவதூறாக பேசி மிரட்டினாராம்.

இதுகுறித்து, கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்த குமரன் மனைவி சந்திரா(48), குமரன், மகள் வேள்விழி, மகன் மது ஆகியோரை கைது செய்தனா்.

258 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு காா்களில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பாா்வையில், பண்ருட்டி உள்கோட்ட தனிப்படை ... மேலும் பார்க்க

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, அரியகோஷ்டி எஸ்.பி.மண்டபம் பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப... மேலும் பார்க்க