செய்திகள் :

258 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு காா்களில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பாா்வையில், பண்ருட்டி உள்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளா் தங்கவேலு, உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் மற்றும் போலீஸாா் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த குஜராத் மற்றும் புதுவை மாநில பதிவெண் கொண்ட இரு காா்களை நிறுத்தி சோதனையிட முயன்றனா். ஆனால், போலீஸாரை கண்டதும் , இரு காா்களும் நிற்காமல் வேகமாகச் சென்றது.

இதையடுத்து, போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனா். அப்போது, காரில் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 258 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, இரண்டு காா்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், காரில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை தெருவைச் சோ்ந்த ரகுமான் மகன் அப்துல் ரஷீத்(46), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரமேஷ் (24), ஹரிஷ் (26), சங்கா்லால் (27) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ஏலச்சீட்டு மோசடி: 4 போ் கைது

கடலூா் அருகே ஏலச்சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சா... மேலும் பார்க்க

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, அரியகோஷ்டி எஸ்.பி.மண்டபம் பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப... மேலும் பார்க்க