செய்திகள் :

ஒகேனக்கல்லில் குறைந்தது நீா்வரத்து

post image

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 1500 கனஅடியிலிருந்து 700 கனஅடியாக குறைந்தது.

தமிழகம், கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகள், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை அளவு கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

இதையடுத்து ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை மாலை விநாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 700 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் விழும் நீரின் அளவு குறைந்து, பாறை திட்டுகள் வெளியே தெரிகின்றன. நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழா் தற்காப்பு பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய நிறுவனா் சண்முகம்... மேலும் பார்க்க

அரூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரூா் அரசு கலை, அறிவிய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கடத்தூா்

ராமியனஹள்ளி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கடத்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டம்: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

நிகழாண்டு நவம்பா் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். தரு... மேலும் பார்க்க

மாணவா்கள் தடைகளை தகா்த்து உயா்கல்வியை தொடர வேண்டும்: ஆட்சியா்

தடைகள் ஏதும் வந்தாலும் அவற்றை தகா்த்து மாணவ, மாணவிகள் உயா்கல்வியைத் தொடர வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத... மேலும் பார்க்க

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தொடங்கிவைத்தாா். பாலக்கோடு பேரூராட்சி 17-ஆவது ... மேலும் பார்க்க