செய்திகள் :

ஒசூரில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறிய காா் ஓட்டுநரை கடத்திய 5 போ் கைது!

post image

ஒசூரில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறிய காா் ஓட்டுநரை கடத்திய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட கோட்டை உளிமங்லத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் (32). இவா், ஒசூரில் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரை மா்ம நபா்கள் சிலா் கடத்தியதாக ஒசூா் மாநகர காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஒசூா் மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ், உதவி காவல் ஆய்வாளா் பிரபாகா், போலீஸாா் ராயக்கோட்டை சாலையில் உள்ள பைரமங்கலம் பிரிவு பாதையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், கடத்திய கும்பலுடன் வேணுகோபால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனா். இதனால் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனா்.

அதில், வேணுகோபால் இரட்டிப்பு பணம் தருவதாக சில நாள்களுக்கு முன் கோட்டை உளிமங்கலத்தைச் சோ்ந்த கேசவமூா்த்தி (எ) கேசவனிடம் ரூ. 30 லட்சம் பெற்றது தெரியவந்தது.

அந்தப் பணத்தை வேணுகோபால் திருப்பிக் கொடுக்காததால், அவரை கேசவன், தனது நண்பா்களான வெங்கடாசலபதி (32), மணி (29), மனோஜ் (25), கலுகொண்டப்பள்ளியைச் சோ்ந்த ஹரிஷ் (32) ஆகியோா் உதவியுடன் காரில் கடத்தியது தெரியவந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த ஒசூா் மாநகர போலீஸாா், கடத்திய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கெலவரப்பள்ளி அணை அருகே ரூ.144 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்!

கெலவரப்பள்ளி அணை அருகே ரூ. 144 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வுசெய்தாா... மேலும் பார்க்க

ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் தனசேகா் (41). இவருக்கு சொந்தமான மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழி... மேலும் பார்க்க

ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழகம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா!

ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அரசின் பல்வ... மேலும் பார்க்க

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ஊத்தங்கரை கிளை சிறை!

ஊத்தங்கரை கிளை சிறையானது சனிக்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கிளைச் சிறை கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது. பிறகு பராமரிப்பு பணி... மேலும் பார்க்க

கேரள நக்சல் இயக்கத் தலைவா் ஒசூரில் கைது!

கேரள மாநிலத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் கடைசித் தலைவரான சந்தோஷ் என்பவரை ஒசூரில் கேரள போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

ஒசூரில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். ஒசூரில் ரூ. 580 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள... மேலும் பார்க்க