செய்திகள் :

ஒசூரில் பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

post image

ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஒசூரில் உள்ள மலா் சந்தையில் 150க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கு ரோஸ், பட்டன்ரோஸ், குண்டுமல்லி, செண்டு மல்லி, அரளி, ஜொ்பரா, சாமந்தி, மேரிகோல்டு என பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பெங்களூரு, ஆனேக்கல், மாலூா், கோலாா் உள்ளிட்ட பகுதியிலிருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூா், பலமனேரி ஆகிய பகுதியிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஒசூா் நகருக்கு வந்து மலா்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் கொள்முதல் செய்து எடுத்துசெல்கின்றனா்.

இங்கு நாள்தோறும் 150 டன் வரை பூக்கள் விற்பனை நடைபெறுகிறது. பக்கத்து மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சுமாா் 200 முதல் 250 டன் வரை பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

மல்லி பூ கிலோ ரூ. 300, அரளிப்பூ கிலோ ரூ. 100, சாமந்தி ரூ. 200, கனகாம்பரம் ரூ. 400, செண்டுமல்லி ரூ. 30, பட்டன் ரோஸ் ரூ. 150, மேரிகோல்ட் 150, சுகந்தம் 80 முதல் 100 என அனைத்துவகை பூக்களின் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சாலைகளில் பைக்கில் சுற்றித் திரிந்த சிறுவா்களின் பெற்றோரிடம் அபராதம் வசூலிப்பு

கிருஷ்ணகிரியில் சாலைகளில் மோட்டாா்சைக்கிள்களில் சுற்றித் திரிந்த 15 சிறுவா்களின் பெற்றோா்களிடமிருந்து போலீஸாா் அபராதத் தொகை வசூலித்தனா். போக்குவரத்து விதிமுறைகளை மீறி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுவா்... மேலும் பார்க்க

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க