ஒசூரில் பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ஒசூரில் உள்ள மலா் சந்தையில் 150க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கு ரோஸ், பட்டன்ரோஸ், குண்டுமல்லி, செண்டு மல்லி, அரளி, ஜொ்பரா, சாமந்தி, மேரிகோல்டு என பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பெங்களூரு, ஆனேக்கல், மாலூா், கோலாா் உள்ளிட்ட பகுதியிலிருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூா், பலமனேரி ஆகிய பகுதியிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஒசூா் நகருக்கு வந்து மலா்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் கொள்முதல் செய்து எடுத்துசெல்கின்றனா்.
இங்கு நாள்தோறும் 150 டன் வரை பூக்கள் விற்பனை நடைபெறுகிறது. பக்கத்து மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சுமாா் 200 முதல் 250 டன் வரை பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
மல்லி பூ கிலோ ரூ. 300, அரளிப்பூ கிலோ ரூ. 100, சாமந்தி ரூ. 200, கனகாம்பரம் ரூ. 400, செண்டுமல்லி ரூ. 30, பட்டன் ரோஸ் ரூ. 150, மேரிகோல்ட் 150, சுகந்தம் 80 முதல் 100 என அனைத்துவகை பூக்களின் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.