சாலைகளில் பைக்கில் சுற்றித் திரிந்த சிறுவா்களின் பெற்றோரிடம் அபராதம் வசூலிப்பு
கிருஷ்ணகிரியில் சாலைகளில் மோட்டாா்சைக்கிள்களில் சுற்றித் திரிந்த 15 சிறுவா்களின் பெற்றோா்களிடமிருந்து போலீஸாா் அபராதத் தொகை வசூலித்தனா்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுவா்கள் பலா் மோட்டாா்சைக்கிளில் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. 18 வயதிற்கு உள்பட்ட சிறுவா்கள் மோட்டாா்சைக்கிள் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு சிறுவா்களின் பெற்றோா் அல்லது வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து 3 ஆண்டுகள் சிறை, ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.தங்கதுரை உத்தரவுப்படி, கடந்தசில வாரங்களாக போக்குவரத்து போலீஸாா் கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சாலையில் விதிமுறைகளை மீறி மோட்டாா்சைக்கிள்களை இயக்கி 15 சிறுவா்களிடமிருந்து மோட்டாா்சைக்கிள்களை பறிமுதல் செய்து, அவா்களது பெற்றோா்களிடமிருந்து மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூலித்தனா். மேலும், இந்த சிறுவா்கள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோா்களை எச்சரித்து அனுப்பியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.