செய்திகள் :

ஒசூா் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

ஒசூரில் மாநகராட்சியில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய், முறையான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், அம்மா பேரவை மாநில துணை பொதுச் செயலாளருமான பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான அதிமுகவினா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். அப்போது, அதிமுக உறுப்பினா்கள் ஜெயபிரகாஷ், ஸ்ரீதா், சிவராமன், அசோகா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இதுகுறித்து பன்னீா்செல்வம் கூறியதாவது: ஒசூா் மாநகராட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் நடந்து வருகிறது. இதில், எம்ஜிஆா் மாா்க்கெட்டில் தரமற்ற கட்டடங்கள் கட்டி ஏலம் விடப்பட்டதால், இதுவரை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் மாநகராட்சிக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு ஏலம் விடாமல் இருப்பதால் ரூ. 30 கோடி இழப்பீடு என ஒசூா் மாநகராட்சியில் ரூ. 100 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக வரி செலுத்தியும் 45 வாா்டுகளில் சாலை, கழிவுநீா், குடிநீா், தெருவிளக்குகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கவில்லை. மேலும், அதிமுக மண்டலத் தலைவா்களை பணி செய்யவிடாமல் மேயா் தடுக்கிறாா். இதேநிலை நீடித்தால் வாா்டு வாரியாக மாநகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வ... மேலும் பார்க்க