செய்திகள் :

ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

post image

சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாரியப்பா நகா் 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் ராஜாராமன் (69). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவா், கடந்த 5-ஆம் தேதி மாலை மனைவியுடன் கோயிலுக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பினாா்.

பின்னா், வீட்டின் படுக்கை அறையில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனா். அதிகாலையில் ராஜாராமன் எழுந்த போது, வீட்டின் வெளிக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாமலை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அல... மேலும் பார்க்க

மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது: கே.எம்.காதா்மொகிதீன்

இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பே... மேலும் பார்க்க

அறப்போா் இயக்கம் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே அறப்போா் இயக்கம், தன்னாட்சி இயக்கம் சாா்பில், உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்தக் கோரி சனிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ... மேலும் பார்க்க