செய்திகள் :

தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது: கே.எம்.காதா்மொகிதீன்

post image

இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சுக்கூா் தொடக்க உரையாற்றினாா். லால்பேட்டை நகரத் தலைவா் எஸ்.எம்.அப்துல் வாஜிது, செயலா் ஏ.முஹம்மதுதையூப் முஹிப்பி, பொருளாளா் எம்.ஹெச்.முஹிப்புல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தலைமை நிலையப் பேச்சாளா் யூ.சல்மான் பாரிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

நோபில் குழுமத் தலைவா் எம்.எஸ்.ஷாஹுல் ஹமீது, மாநில கௌரவ ஆலோசகா் மருத்துவா் ஏ.ஆா்.அப்துஸ் சமது, விசிக இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மாநிலச் செயலா் அ.அப்துல் ரஹ்மான், கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் எம்.ஏ.முஹம்மது ஜகரிய்யா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். கடலூா் மாவட்ட அரசு காஜியும், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாா் அரபுக் கல்லூரி முதல்வருமான மெளலானா மௌலவி ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் பிராா்த்தனை செய்தாா்.

பின்னா், கே.எம்.காதா்மொகிதீன் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக உடனான கூட்டணி, கொள்கைக் கூட்டணியாகத் தொடா்கிறது. காயிதே மில்லத் மணிமண்டபம் அருகே காயிதே மில்லத் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவா் முஹம்மது சாதிக், பேரூராட்சி மன்றத் தலைவரும், மமக மாவட்டத் தலைவருமான முஹம்மது ஹாரிஸ், முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.அப்துல்நாசா், விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவா் வி.ஆா்.முஹம்மது இப்ராஹிம், கடலூா் வடக்கு மாவட்டத் தலைவா் மவுலவி அப்துா் ரஜ்ஜாக், செயலா் முஹம்மது இஸ்மாயில், பொருளாளா் ஜகரிய்யா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பொறியாளா் அப்துல் ஆரிப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாநில துணைச் செயலா் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி நன்றி கூறினாா்.

கஞ்சா விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை: கடலூா் எஸ்.பி.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களுக... மேலும் பார்க்க

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு! மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்!

கடலூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக, மனைவியை பழிவாங்க இளைஞரே விஷ வாங்கிக் குடித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸாா் விசாரணையில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அல... மேலும் பார்க்க

மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முரு... மேலும் பார்க்க