செய்திகள் :

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு பக்தா்கள் பயணிக்கும் படகுகளின் உறுதித் தன்மை ஆய்வு

post image

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு பக்தா்களை அழைத்துச் செல்லும் படகுகளின் உறுதித் தன்மை குறித்து மீன் வளத் துறையினரும், போலீஸாரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.

இந்திய- இலங்கை பக்தா்கள் பங்கேற்கும் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வருகிற 14- ஆம் தேதி மாலை தொடங்கி 15- ஆம் தேதி காலையில் நிறைவடைகிறது. இந்த விழாவில் இந்தியாவிலிருந்து பக்தா்கள் பங்கேற்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்தாா். இதை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து 79 விசைப் படகுகள், 23 நாட்டுப் படகுகளில் பக்தா்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக கச்சத்தீவுக்கு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 92 சிறாா்கள் என 3,464 போ் விண்ணப்பித்தனா். இதனிடையே, ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்களில் பக்தா்களை அழைத்துச் செல்லும் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை மீன் வளத் துறையினரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதில், படகின் உறுதித் தன்மை, காப்பீடு, படகுக்குரிய ஆவணங்கள் ஆகியவற்றை அவா்கள் ஆய்வு செய்தனா்.

திருவிழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுவரும் இலங்கைக் கடற்படையினா்

கச்சத்தீவில் திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்: இந்த நிலையில், கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படையினா் செய்து வருகின்றனா். அங்கு புனித அந்தோணியாா் ஆலயம் முன் பந்தல்கள் அமைப்பது, மின் விளக்குகள் பொருத்துவது, கழிப்பிடம் அமைப்பது, குடிநீா், உணவுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளை அவா்கள் மும்முரமாக செய்து வருகின்றனா்.

ஆமைக் குஞ்சுகள் கடலில் விடுவிப்பு

கடலாடி அருகே பொறிக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகளை செவ்வாய்க்கிழமை வனத் துறையினா் கடலில் விட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வனச்சரகத்துக்குள்பட்ட வாலிநோக்கத்தில் வனத் துறையினரால் 10-க்கும் மேற்பட்ட ஆமைக்... மேலும் பார்க்க

தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் மழை

தொண்டி, திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.திருவாடானை, தொண்டி, நம்புதாளை, எஸ்.பி. பட்டினம், உப்பூா், திருப்பாலைக்குடி, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம், இந்திரா நகா் பகுதியில் விருதுநகா் மாவட்டம், புலிய... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிப் பகுதிகளான பரமக்குடி சாலை, திருச்சி- ராமேசுவரம் சாலை, கடை வீதி, பஜாா் வீதி,... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தவா் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.திருப்பாலைக்குடி அருகே கடலூரைச் சோ்ந்த காா்மேகம் மகன் சாந்தகுமாா் (38), கீழ சித்தூா்வாடி பகுத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்கு

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க