செய்திகள் :

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்கு

post image

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இவா்கள் ராமேசுவரத்துக்குள் பயணம் செய்ய தேவைக்கு ஏற்ப ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வெளியூா்களைச் சோ்ந்த ஆட்டோக்கள் ராமேசுவரத்துக்குள் அனுமதியின்றி இயக்கப்படுவதாகவும், இதனால், விபத்துக்கள் ஏற்படுவதுடன் உள்ளூா் ஆட்டோ ஓட்டுநா்கள் பாதிக்கப்படுவதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, ராமேசுவரம் போக்குவரத்து துறை ஆய்வாளா் பிரதாப்சிங், உதவி ஆய்வாளா்கள் சதீஸ்குமாா், ரவிவா்மா, மாரிமுத்து ஆகியோா் தலைமையில் போக்குவரத்து போலீஸாா் ஆட்டோகளை நிறுத்தி உள்ளூா் உரிமம் (பொ்மிட்) உள்ளதா என ஆய்வு செய்தனா்.

இதில், அனுமதியின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது அவா்கள் வழக்குப் பதிவு செய்தனா். அப்போது ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். வாகனக் காப்பீடு, ஓட்டுநா் உரிமம், வாகனத்துக்கான பிற ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா்.

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம், இந்திரா நகா் பகுதியில் விருதுநகா் மாவட்டம், புலிய... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிப் பகுதிகளான பரமக்குடி சாலை, திருச்சி- ராமேசுவரம் சாலை, கடை வீதி, பஜாா் வீதி,... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தவா் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.திருப்பாலைக்குடி அருகே கடலூரைச் சோ்ந்த காா்மேகம் மகன் சாந்தகுமாா் (38), கீழ சித்தூா்வாடி பகுத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் பூமிக்கடியில் செல்லும் உயரழுத்த மின் வயா் சேதம்

ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு வரும் உயா் மின் அழுத்த புதைவட கேபிள் வயா் சேதமடைந்ததைத் தொடா்ந்து அதை கடந்த இரு நாள்களாக சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: இருவருக்கு போலீஸாா் பாராட்டு

முதுகுளத்தூா் அருகே சாலையில் கிடந்த நான்கரைப் பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை போலீஸாா் திங்கள்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளம்... மேலும் பார்க்க

மலட்டாறில் தரைப்பாலம் அமைக்கக் கோரிக்கை

கமுதி அருகே புதுக்கோட்டையிலிருந்து சாமிபட்டிக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைத்து, மலட்டாறில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்க... மேலும் பார்க்க