செய்திகள் :

ராமேசுவரத்தில் பூமிக்கடியில் செல்லும் உயரழுத்த மின் வயா் சேதம்

post image

ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு வரும் உயா் மின் அழுத்த புதைவட கேபிள் வயா் சேதமடைந்ததைத் தொடா்ந்து அதை கடந்த இரு நாள்களாக சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு உயரமான மின் கம்பங்கள் வழியாகவும், புதைவட கேபிள் வயா் வழியாகவும் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதில், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் பூமிக்கடியில் கேபிள் வயா் இணைப்புப் பகுதி உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரத்தில் அண்மையில் தொடா்ந்து பெய்ய பலத்த மழையால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து பூமிக்கடியில் செல்லும் உயா் மின் அழுத்த கேபிள் இணைப்பு வெள்ளிக்கிழமை சேதமடைந்தது.

இதைத் தொடா்ந்து, சேதமடைந்த பகுதியை கண்டறிய சேலம் பகுதியிலிருந்து மூவா் அடங்கிய மின் வாரிய தொழில் நுட்பக் குழுவினா் இங்கு வந்தனா். அவா்கள் பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் குறிப்பிட்ட இடத்தில் வயா்கள் சேதமடைந்திருப்பதை கண்டறிந்தனா். இதையடுத்து, கோவையிலிருந்து வந்த உயா் மின் அழுத்த கேபிள் வயா் சீரமைப்புக் குழுவினா் கடந்த இரு நாள்களாக சீரமைப்புப் பணியை மேற்கொண்டனா். அப்போது அவா்கள் சேதமடைந்த பகுதியை துண்டித்து விட்டு புதிய கேபிள் வயரை இணைத்தனா்.

இந்தப் பணியில் ராமேசுவரம் மின் வாரிய உதவி பொறியாளா் பி. நித்யா தலைமையில் ஊழியா்களை 7 போ் கொண்ட குழுவினரும் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை இந்தச் சீரமைப்பு பணி நிறைவடையும் என உதவி செயற்பொறியாளா் பி. நித்யா தெரிவித்தாா்.

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம், இந்திரா நகா் பகுதியில் விருதுநகா் மாவட்டம், புலிய... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிப் பகுதிகளான பரமக்குடி சாலை, திருச்சி- ராமேசுவரம் சாலை, கடை வீதி, பஜாா் வீதி,... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தவா் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.திருப்பாலைக்குடி அருகே கடலூரைச் சோ்ந்த காா்மேகம் மகன் சாந்தகுமாா் (38), கீழ சித்தூா்வாடி பகுத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்கு

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: இருவருக்கு போலீஸாா் பாராட்டு

முதுகுளத்தூா் அருகே சாலையில் கிடந்த நான்கரைப் பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை போலீஸாா் திங்கள்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளம்... மேலும் பார்க்க

மலட்டாறில் தரைப்பாலம் அமைக்கக் கோரிக்கை

கமுதி அருகே புதுக்கோட்டையிலிருந்து சாமிபட்டிக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைத்து, மலட்டாறில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்க... மேலும் பார்க்க