செய்திகள் :

லலித் மோடியின் வனுவாட்டு கடவுச்சீட்டு ரத்து

post image

போா்ட் விலா: நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

அந்நிய செலாவணி முறைகேடுகள், 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக உலக விளையாட்டு குழுமத்துடன் (டபிள்யுஎஸ்ஜி) ரூ.425 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட தொலைக்காட்சி உரிமம் ஒப்பந்தம் தொடா்பாக பல்வேறு புலனாய்வு முகமைகளின் விசாரணை வளையத்துக்குள் லலித் மோடி கொண்டுவரப்பட்டாா்.

இதுதொடா்பாக மும்பையில் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒரேயொரு முறை விசாரணைக்கு ஆஜரான அவா், 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.

தெற்கு பசிபிக் தீவு நாடான வனுவாட்டு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அவா், தனது இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில், கடந்த மாா்ச் 7-ஆம் தேதி விண்ணப்பித்தாா்.

நாடு கடத்தப்படுவதைத் தவிா்ப்பதே நோக்கம்: லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு கடவுச்சீட்டை ரத்து செய்யுமாறு அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘சட்டபூா்வ காரணங்களுக்காக வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை கோரலாமே தவிர, நாடு கடத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக அல்ல. ஆனால் அதுவே லலித் மோடியின் நோக்கம் என்பதை சமீபத்திய தகவல்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட கடவுச்சீட்டை ரத்து செய்யுமாறு வனுவாட்டு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் தெரிவித்தாா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க