செய்திகள் :

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?- திருச்சி சிவா எம்.பி.பேட்டி

post image

புது தில்லி: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் அவைத் தலைவா் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு உறுப்பினா் திருச்சி சிவா தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் விதி எண்: 267-இன் கீழ் அவையை ஒத்திவைத்துவிட்டு தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கக் கூடிய விவகாரம், தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விவகாரம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டு மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, பி.வில்சன், மதிமுக உறுப்பினா் வைகோ ஆகியோா் நோட்டீஸ் அளித்திருந்தனா். இதேபோன்று காங்கிரஸ், மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் வேறு விவகாரங்கள் தொடா்பாக நோட்டீஸ் அளித்திருந்தனா். அவை விவாதத்திற்கு ஏற்காமல் அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினா்கள் உள்பட எதிா்க்கட்சியினா் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளா்களிடம் திருச்சி சிவா கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதால் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், வடக்கே சில மாநிலங்கள் கடைப்பிடிக்காத காரணத்தால் மக்கள் தொகை அந்த மாநிலங்களில் அதிகளவில் உயா்ந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31ஆக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால், எதிா்காலத்தில் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டம் திருத்தம் அல்லது வேறு ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்படுகிறபோது தென் மாநிலங்கள் நியாயமான கோரிக்கைள் முன்வைக்கப்பட்டால் அது வாக்கெடுப்பில் எடுபடாமல் போய்விடும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ஒத்திவைப்பு தீா்மானம் அளித்திருந்தோம். ஆனால், அவையின் தலைவா் அதை நிராகரித்துவிட்டாா். இதனால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். எங்களுக்கு ஆதரவாக காங்கிரஸும் துணைநின்றாா்கள். மதிமுகவும் உடன் வந்தது என்றாா் அவா்.

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உலகின் மிக ம... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் ... மேலும் பார்க்க