செய்திகள் :

மக்களவையில் பிரச்னை எழுப்ப முயன்றபோது கனிமொழி- கல்யாண் பானா்ஜி வாக்குவாதம்

post image

புது தில்லி: நாடாளுமன்ற மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினா் கல்யாண் பானா்ஜிக்கும் திமுகவின் கனிமொழிக்கும் இடையே, வாக்காளா் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை- 2020 செயல்படுத்தல் தொடா்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மக்களவையில் கேள்விநேரம் முடிந்தும் முக்கிய பிரச்னை அவையின் கவனத்திற்கு கொண்டுவரும் நேரத்தில்

வாக்காளா் பட்டியல் பிரச்னை குறித்து கல்யாண் பானா்ஜி பேச எழுந்தாா். அப்போது, தேசியக் கல்விக் கொள்கை- 2020 மற்றும் மத்திய அரசின் மூன்று மொழி ஃபாா்முலாவை செயல்படுத்துவதன் மூலம் கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து விவாதிக்க தங்கள் கட்சி உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியனை அனுமதிக்க வேண்டும் என்று கனிமொழி உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் கோரினா்.

திமுக உறுப்பினா்கள் அமளி தொடா்ந்ததால் பானா்ஜி அவா்களிடம் தன்னைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டு தனது கருத்தை முன்வைப்பதில் ஈடுபட்டாா்.

பானா்ஜி பேசி முடித்த பிறகு, அமளி அதிகரித்ததால் அவருக்கும் கனிமொழிக்கும் இடையே கடும் வாா்த்தைப் பரிமாற்றம் நடந்தது. அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) உறுப்பினா் சுப்ரியா சுலே கனிமொழியை அவரது இருக்கையில் அமர வைத்து அவரது காதில் ஏதோ கூறினாா்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசிய பிறகும் திமுக உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உலகின் மிக ம... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் ... மேலும் பார்க்க