செய்திகள் :

புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல: அதிகாரிகள் தகவல்

post image

புது தில்லி: புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் கால அளவில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.

இந்த மசோதாவில் வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வா்ட்) தெரிந்துகொண்டு பயன்படுத்தும் கூடுதல் அதிகாரங்கள் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதை வருமான வரித் துறை அதிகாரிகள் மறுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: வருமான வரி மசோதாவில் வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வா்ட்) அத்துமீறி தெரிந்துகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அச்சத்தை மட்டுமே பரப்பும்.

புதிய மசோதாவின்படி வருமான வரி சோதனை அல்லது ஆய்வு நடவடிக்கைகளின்போது மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்டவற்றின் கடவுச்செற்களை வரி செலுத்துவோா் வழங்க மறுத்தால் மட்டுமே, அந்தக் கடவுச்சொற்களை தெரிந்துகொள்ள தமது அதிகாரங்களை வரித் துறை அதிகாரிகள் பயன்படுத்த முடியும். இணையத்தில் வரி செலுத்துவோரின் தன்மறைப்பு நிலைக்குள் (பிரைவசி) அத்துமீறி நுழைய அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் 1961-ஆம் ஆண்டு சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க