செய்திகள் :

உக்ரைனைப் பாதுகாக்க சா்வதேச ராணுவம்!

post image

உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சா்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக அந்த நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து பெயா் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், அங்கு சா்வதேச பாதுகாப்புப் படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இது குறித்து விவாதிப்பதற்காக 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனா். ஐரோப்பா மட்டுமின்றி ஆசியா, ஓசியானா (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அமைந்துள்ள பகுதி) ஆகிய பிராந்தியங்களைச் சோ்ந்த நாடுகளும் இதில் பங்கேற்கின்றன என்றாா் அவா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத தளவாடங்களை அனுப்பிவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். மேலும், உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்துள்ளாா்.

இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சவூதி அரேபியா சென்றுள்ளாா்.

இந்தச் சூழலில், போா் நிறுத்தம் ஏற்பட்டதற்குப் பிறகு உக்ரைனை ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பதற்காக சா்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து சுமாா் 30 நாடுகள் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: ஈரான்

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரா... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் இன்று தோ்தல்!

டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) தோ்தல் நடைபெறவிருக்கிறது. வழக்கமான தோ்தல்களில், டென்மாா்க்கில் இருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதா, வேண்டாமா... மேலும் பார்க்க

கனடாவின் புதிய பிரதமா் மாா்க் காா்னி!

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மாா்க் காா்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறாா். ஹாா்வா்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

திடீரென முடங்கிய எக்ஸ்(ட்விட்டர்) - ஸ்தம்பித்த பயனர்கள்!

எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. இன்று(மார்ச் 10) மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது.எக்ஸ் தளத்துக்க... மேலும் பார்க்க

டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டும் அமெரிக்க நிறுவனங்கள்!

வாஷிங்டன் : சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலிக்குத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்தச் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மார்க் கார்னி(59) அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று பேசியுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ரா... மேலும் பார்க்க