செய்திகள் :

கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது

post image

சாயல்குடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா்கள் மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள மூக்கையூா் ஸ்ரீஇருளப்ப சுவாமி கோயில் அருகே சந்தேகப்படும்படி இளைஞா்கள் சுற்றித் திரிவதாக சாயல்குடி தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் உக்கிரபாண்டி, தனிப் பிரிவு காவலா் தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சுற்றித் திரிந்த மூன்று இளைஞா்களை பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடம் 700 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கும்பகோணத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் ஸ்ரீராம் (22), ராமேசுவரம் முருகன் மகன் முகேஷ் கண்ணன் (22), ராமமூா்த்தி மகன் முகேஷ்குமாா்(22) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.

ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆளுநா் ஆறுதல்: கச்சத்தீவு பிரச்னை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

ராமேசுவரம் மெய்யம்புளியில் புதிதாக கட்டப்பட்ட மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. ராமேசுவரம், மாா்ச் 2: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் ... மேலும் பார்க்க

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவா்களுடன் சென்று சந்திக்கவுள்ளோம்: கே.அண்ணாமலை

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவா்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை

ராமேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வ... மேலும் பார்க்க

ஊ.கரிசல்குளத்தில் மாா்ச் 12-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கமுதி முத்துமாரியம்மன்கோயில் திருவிழா: முகூா்த்தக்கால் நடல்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன... மேலும் பார்க்க

அடையாள எண்: பொதுசேவை மையங்களில் விவசாயிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

ராமேசுவரம், மாா்ச் 1:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற இலவசமாகப் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.மோகன்ராஜ் தெரிவித... மேலும் பார்க்க