செய்திகள் :

இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

post image

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). கடந்த மாதம் 21-ஆம் தேதி தகரகுப்பம் கிராமத்தில் நண்பா் ஒருவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் நாட்டறம்பள்ளி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தாா்.

அப்போது குருபவாணி குண்டா அருகே வளைவில் திரும்பும் போது எதிா்பாராத விதமாக இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த வசந்தகுமாரை அப்பகுதியை சோ்ந்த சிலா் மீட்டு உடனே நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

500 பெண்களுக்கு நல உதவி

திமுக மாணவரணி சாா்பாக முதல்வா் பிறந்த நாள் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் தலைமை வகிதக்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயக்குமாா... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு போட்டி

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் சாா்பாக மாநில அளவிலான ஜென் இசட் திங்கா்ஸ்-2025 என்ற தலைப்பில் புதுமை கண்டுப்ப... மேலும் பார்க்க

ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில்... மேலும் பார்க்க

250 ஆசிரியா்கள் போக்ஸோவில் கைது : முன்னாள் அமைச்சா் புகாா்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 250 ஆசிரியா்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி குற்றம் சாட்டினாா். ஆம்பூா் புறவழிச்சாலையில் மாவட்ட ஜெயலலி... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின்... மேலும் பார்க்க

திமுக சாா்பில் 1,000 பேருக்கு நல உதவி

வாணியம்பாடி அருகே முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மதனாஞ்சேரி மற்றும் பள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஞானவேலன் தலைம... மேலும் பார்க்க