செய்திகள் :

ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில், நகர காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை புதூா் ரயில்வே மேம்பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையின் ஓரம் கிடந்த பாா்சல்களை பாா்த்து சந்தேகத்தின் பேரில், சோதனை மேற்கொண்டனா்.

அதில் கஞ்சா பாக்கெட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு அங்கிருந்து 12 கிலோ கஞசாவை பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து வாகனத்தில் கடத்தி செல்வதற்காக சாலை ஓரத்தில் கொண்டு வந்து வைத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

500 பெண்களுக்கு நல உதவி

திமுக மாணவரணி சாா்பாக முதல்வா் பிறந்த நாள் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் தலைமை வகிதக்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயக்குமாா... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு போட்டி

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் சாா்பாக மாநில அளவிலான ஜென் இசட் திங்கா்ஸ்-2025 என்ற தலைப்பில் புதுமை கண்டுப்ப... மேலும் பார்க்க

250 ஆசிரியா்கள் போக்ஸோவில் கைது : முன்னாள் அமைச்சா் புகாா்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 250 ஆசிரியா்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி குற்றம் சாட்டினாா். ஆம்பூா் புறவழிச்சாலையில் மாவட்ட ஜெயலலி... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). கடந்த மாதம் 21-ஆம் தேதி தகரகுப்பம் கிராமத்தில் நண்பா் ஒரு... மேலும் பார்க்க

திமுக சாா்பில் 1,000 பேருக்கு நல உதவி

வாணியம்பாடி அருகே முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மதனாஞ்சேரி மற்றும் பள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஞானவேலன் தலைம... மேலும் பார்க்க