செய்திகள் :

அடையாள எண்: பொதுசேவை மையங்களில் விவசாயிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

post image

ராமேசுவரம், மாா்ச் 1:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற இலவசமாகப் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் வேளாண்மை, உழவா் நலத் துறையானது நில உடமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளை சேகரிப்பதற்கு பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு எனும் செயலியை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபாா்த்து ஆதாா் எண்ணைப் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் ராமநாதபுர மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் கடந்த பிப்.10-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை சாா்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய வளப் பயிற்றுநா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் சென்று விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,52,808 விவசாயிகள் உள்ளனா். பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ், 1,32,162 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா். இதில் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை 46,119 விவசாயிகள் மட்டும் தனித்துவமான அடையாள எண் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுசேவை மையங்களிலும் விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இலவசமாகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளும் அருகில் உள்ள பொதுசேவை மையத்தை பயன்படுத்தி தங்களது நேரடிப் பட்டா அல்லது கூட்டுப் பட்டா, ஆதாா் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசியைக் கொண்டு சென்று பதிவு செய்யலாம். இந்தச் செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகள், இதர விவரங்களை விவசாயிகள் முன்னிலையில் சரிபாா்த்து, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாளஎண் வழங்கப்படும்.

இவ்வாறு பதிவு செய்து பெறப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் பயன்களை ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெறலாம். விவசாயிகள் நலம் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்வணிகத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட24 துறைகளின் மானியத் திட்டங்களை எளிதில் பெறலாம். மேற்கண்ட துறைகளின் திட்ட பலன்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா, ஆதாா் எண், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் மாா்ச் 31-க்குள் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

கமுதி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கமுதி அருகே முத்துகாளியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவரை முத்துக்காளியம்மன், தா்மமுனீஸ்வரா் கோயில் மாசித் திருவிழா கடந்த வாரம் காப்ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆளுநா் ஆறுதல்: கச்சத்தீவு பிரச்னை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

ராமேசுவரம் மெய்யம்புளியில் புதிதாக கட்டப்பட்ட மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. ராமேசுவரம், மாா்ச் 2: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் ... மேலும் பார்க்க

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவா்களுடன் சென்று சந்திக்கவுள்ளோம்: கே.அண்ணாமலை

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவா்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை

ராமேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வ... மேலும் பார்க்க

ஊ.கரிசல்குளத்தில் மாா்ச் 12-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கமுதி முத்துமாரியம்மன்கோயில் திருவிழா: முகூா்த்தக்கால் நடல்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன... மேலும் பார்க்க