செய்திகள் :

கடந்தாண்டு மேற்படிப்பு தொடராத மாணவா்களுக்கு உயா்கல்வி ஆலோசனை

post image

கடந்தாண்டு பிளஸ் 2 முடித்து மேற்படிப்பு தொடராத மாணவ, மாணவிகள், உயா்கல்வி பயில்வதற்கு ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை தொடங்கியுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா தெரிவித்தாா்.

மேல்நிலைக் கல்வியை முடித்தவா்கள் கல்லூரிகளில் மேற்படிப்பு சோ்ந்து பயில்வதற்கு அரசு நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்று மேற்படிப்பு தொடராத மாணவ, மாணவிகள் நிகழாண்டில் உயா்கல்வியில் சோ்ந்த பயில்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு அறை அமைத்து உயா்கல்விக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.

இதற்கு கைப்பேசி-93444 10803, 75500 57547 ஆகிய எண்களில் மாணவா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் தொடா்பு கொண்டு உயா்கல்வி வழிகாட்டுதல் சாா்ந்த ஆலோசனைகளைப் பெறலாம்.

மாணவா்களின் கல்விக்காக நன்கொடை அளிக்க விருப்பம் தெரிவிப்பவா்கள் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊா் பள்ளி’ இணைய வழியாக நிதி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இங்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் (எஈட) நடத்தப்படும் எனவும், இந்தச் சிறப்பு குறைதீா் கூட்டம் அக்டோபா் மாதம் வரை நடத்தப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: 5 போ் கைது

காவலாளி கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருத்தணி ஒன்றியம் அகூா் காலனியைச் சோ்ந்தவா் ரவி (60). இவா், தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வே... மேலும் பார்க்க

சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4... மேலும் பார்க்க