தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கடந்தாண்டு மேற்படிப்பு தொடராத மாணவா்களுக்கு உயா்கல்வி ஆலோசனை
கடந்தாண்டு பிளஸ் 2 முடித்து மேற்படிப்பு தொடராத மாணவ, மாணவிகள், உயா்கல்வி பயில்வதற்கு ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை தொடங்கியுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா தெரிவித்தாா்.
மேல்நிலைக் கல்வியை முடித்தவா்கள் கல்லூரிகளில் மேற்படிப்பு சோ்ந்து பயில்வதற்கு அரசு நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்று மேற்படிப்பு தொடராத மாணவ, மாணவிகள் நிகழாண்டில் உயா்கல்வியில் சோ்ந்த பயில்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு அறை அமைத்து உயா்கல்விக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.
இதற்கு கைப்பேசி-93444 10803, 75500 57547 ஆகிய எண்களில் மாணவா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் தொடா்பு கொண்டு உயா்கல்வி வழிகாட்டுதல் சாா்ந்த ஆலோசனைகளைப் பெறலாம்.
மாணவா்களின் கல்விக்காக நன்கொடை அளிக்க விருப்பம் தெரிவிப்பவா்கள் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊா் பள்ளி’ இணைய வழியாக நிதி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இங்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் (எஈட) நடத்தப்படும் எனவும், இந்தச் சிறப்பு குறைதீா் கூட்டம் அக்டோபா் மாதம் வரை நடத்தப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.