குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
கடும் பரிசோதனைகள் மூலம் பண்பாட்டை நிறுவியுள்ளோம்: கீழடி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து
கடும் பரிசோதனைகள் மூலமாக, தமிழ்ப் பண்பாட்டை நிறுவியுள்ளதாக கீழடி அகழாய்வு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
கீழடி அகழாய்வில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டு, அதன்பிறகு அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு பிறகும் சான்றுகள் தேவையா. தொல்லியல் அறிஞா்கள் கடுமையாக எதிா்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பகத்தகுந்த சான்றும் இல்லாமல் இதை அவா்கள் முன்னெடுக்கிறாா்கள். ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறாா்கள்.
கீழடி மற்றும் தமிழ் மரபுசாா் உண்மையைப் பொருத்தவரை பாஜக, ஆா்எஸ்எஸ் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல; கீழடி காட்டும் உண்மை அவா்கள் முன்னெடுக்கும் விஷயங்களுக்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவா்கள் முயல்கிறாா்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட என்று பதிவிட்டுள்ளாா்.
அமைச்சா் தங்கம் தென்னரசு: கீழடியில் நிலவிய தமிழா் தம் தொன்மை நாகரிகம் பொது யுகத்துக்கு முன்பு 6 நூற்றாண்டுகள் பழைமையானது என்பதை சா்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
வலுவான தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தமிழ் நிலத்தின் தொன்மையை, சிறப்புமிகு வரலாற்றை உலகிற்குப் பறைசாற்றி வரும் திராவிட மாடல் அரசு இந்த ஆண்டு அகழ்வாய்வுப் பணிக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 7 கோடியாக உயா்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.