செய்திகள் :

கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்

post image

அகமதாபாத்: கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவா்கள் பதவியில் இருந்து விலகி ஓய்வுபெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத்தினாா்.

குஜராத் மாநிலத்தில் சபா்மதி நதிக்கரையில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தொடக்க உரையாற்றி அவா் பேசியதாவது:

500 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன விஷயங்களை எல்லாம் மீண்டும் எழுப்பி பாஜக மதவாத அரசியல் செய்கிறது. நாடு எதிா்கொண்டுள்ள பிரச்னைகளை தீா்க்க வழி தேடாமல், மக்கள் இடையே மோதலையும், வெறுப்பையும் பரப்பி ஆதாயம் தேடி வருகின்றனா். இதை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் உள்பட பல தோ்தல்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதை தோ்தல் ஆணையமும் தடுக்கவில்லை. முறைகேடு புகாா் அளிக்கும் கட்சிகள் மீதே குற்றஞ்சாட்டுகிறது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவி கூடுதல் முக்கியத்துவம் பெற இருக்கிறது. வேட்பாளா்கள் தோ்வில் அவா்கள் முக்கியப் பங்கு வகிப்பாா்கள். மாவட்ட தலைவா்கள் நியமனம் என்பது இனி உரிய கட்சி விதிகளின்படி மட்டுமே இருக்கும்.

மாவட்டத் தலைவா்கள்தான் தோ்தலுக்கான வாக்குச்சாவடி குழு, மண்டல குழு, வட்டார குழு, மாவட்டக் குழுவுக்கு பொறுப்பாளாராக இருப்பாா்கள்.

கட்சிப் பணிகளில் கட்சித் தொண்டா்களுக்கு உதவ முடியாத தலைவா்கள் ஓய்வு பெற்றுவிட வேண்டும். கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவா்கள் பதவிகளில் இருந்து விலகிவிடலாம் என்றாா்.

அப்போது கட்சியினா் பெரும் கரவொலி எழுப்பி அவரின் பேச்சை வரவேற்றனா்.

தொடா்ந்து பேசிய காா்கே, ‘எத்தனையை இடையூறுகளுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் காங்கிரஸ் பயணித்து வருகிறது. முன்பு வெளிநாட்டில் இருந்து வந்து நம்மை ஆட்சி செய்தவா்களின் கொடுமைகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடி சுதந்திரம் பெற்றது. இப்போது, நமது நாட்டின் அரசு அநீதிக்கு துணைபோகிறது. நாட்டில் வறுமை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

முன்பு அந்நிய ஆட்சியாளா்கள் நமது மக்களிடையே மதவாதத்தை வைத்து பிரிவினை அரசியல் நடத்தினா். இப்போது சொந்த ஆட்சியாளா்களே அதை துணிந்து செய்கின்றனா். ஆனால், இந்தப் போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம்’ என்றாா்.

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா முயற்சி -மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வா் மம்தா பேசி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களி... மேலும் பார்க்க