செய்திகள் :

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

post image

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். நிகழ்வில் அவர் பேசியதாவது,

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய முஸ்லிம் பெண்களை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மாநில அரசு 2007இல் மாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவியைத் தொடங்கியது. இந்த நிதியுதவியானது இப்போது மாதத்திற்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சிறுவர் மற்றும் சிறுமிகளின் கல்வியை ஆதரிக்க அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அரசின் சிறுபான்மை நலத்துறை பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

2005-க்கு முன்பு மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்திற்காக எந்தவித முன்னுரிமையும் வழங்கப்படாத நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முஸ்லிம் சமூகத்திற்காகப் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.

முன்னதாக இந்து-முஸ்லிம் மோதல்கள் அதிகமாக இருந்ததாகவும், இப்போது அத்தகைய மோதல்கள் எதுவும் இல்லை. அதேபோன்று மதரஸாக்களின் நிலை முன்பு மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. மதரஸா ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவில்லை. 2006-க்குப் பிறகு, மதரஸாக்கள் பதிவு செய்யப்பட்டு அரசாங்க அங்கீகாரம் வழங்கப்பட்டன. தற்போது மதரஸா ஆசியர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுகிறார்கள்.

முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பைத் தொடங்க பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்து, முஸ்லிம், உயர் சாதி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் உள்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் வளர்ச்சிக்காகவும் ஆரம்பத்திலிருந்து நாங்கள் பாடுபட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

Bihar Chief Minister Nitish Kumar on Thursday said the state government has taken several measures to improve the condition of those Muslim women who have been abandoned by their husbands.

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மன... மேலும் பார்க்க

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ... மேலும் பார்க்க

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது, காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை எந்... மேலும் பார்க்க

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் என்பது வெறும் தனிநபர்களைப் பற்றியது அல்ல. நம் நாட்டை நிறுவியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா என்ற கருத்தை உறுதிப்படுத்துவதற்காக என்று இந்தியா கூட்டணியி... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பத... மேலும் பார்க்க

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

தெற்கு தில்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழு... மேலும் பார்க்க