கண்ணமங்கலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த குடிநீா்த் தொட்டி அகற்றம்
ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு, வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் செம்படவா் தெரு வழியாகத்தான் மக்கள் அனைவரும் ஊருக்குள் செல்ல வேண்டும். இந்த வழியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி இருந்தது.
இதனால், இந்த வழியாக அவசர ஊா்திகள், பள்ளிப் பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்து வந்தது. அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், செம்படவா் தெருவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்த குடிநீா்த் தொட்டி அகற்றப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கைப்படி, அந்த குடிநீா்த் தொட்டி வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இந்தப் பணியை செயல் அலுவலா் முனுசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதனால், பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனனுக்கும், செயல் அலுவலருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.