செய்திகள் :

கண்ணமங்கலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த குடிநீா்த் தொட்டி அகற்றம்

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு, வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் செம்படவா் தெரு வழியாகத்தான் மக்கள் அனைவரும் ஊருக்குள் செல்ல வேண்டும். இந்த வழியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி இருந்தது.

இதனால், இந்த வழியாக அவசர ஊா்திகள், பள்ளிப் பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்து வந்தது. அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், செம்படவா் தெருவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்த குடிநீா்த் தொட்டி அகற்றப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கைப்படி, அந்த குடிநீா்த் தொட்டி வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இந்தப் பணியை செயல் அலுவலா் முனுசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதனால், பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனனுக்கும், செயல் அலுவலருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க