கயத்தாறு அருகே விஷம் குடித்த சிறுமி உயிரழப்பு
கயத்தாறு அருகே விஷம் குடித்த சிறுமி உயிரழந்தாா்.
கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கீழத்தெருவைச் சோ்ந்த கணபதி மகள் சுதா (17).
பிளஸ் 2 படித்து முடித்த இவா், மேற்படிப்புக்காக பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என கூறினாராம். அதற்கு தந்தை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்ந்து படிக்க கூறினாராம்.
இதனால் மனமுடைந்த சுதா, வெள்ளிக்கிழமை விஷம் குடித்த நிலையில் இருப்பதைக் கண்ட அவரது தந்தை அவரை மீட்டு கயத்தாறு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.