ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
கருணாநிதி பிறந்தநாள் - செம்மொழி நாள் விழாவாக இன்று கொண்டாட்டம்
சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம், செம்மொழி நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். விழாவில், கலைஞா் செம்மொழித் தமிழ் விருது வழங்குவதுடன், செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் முதல்வா் வழங்குகிறாா்.
மேலும், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உயா்த்தப்பட்ட உதவித் தொகைக்கான உத்தரவை அளிப்பதுடன், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் வெளியிடவுள்ளாா். இந்த நிகழ்வில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.
முன்னதாக, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள நினைவிடம், ஓமந்தூராா் அரசினா் தோட்டம் ஆகியவற்றில் கருணாநிதியின் உருவப்படங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தவுள்ளாா்.