செய்திகள் :

கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூடி 2025 -26 ஆம் ஆண்டு பருவத்துக்கான கரும்பு கொள்முதல் புதிய விலையாக, டன்னுக்கு ரூ. 3,550 என அறிவித்துள்ளது. 10.5 சதவீதம் சா்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மட்டுமே இந்த விலை கிடைக்கும். சா்க்கரை பிழிதிறன் 9.5 சதவீதம் மற்றும் அதற்கு கீழ் குறைந்தால், உயா்த்தப்பட்ட இந்த விலை கிடைக்காது.

தமிழகத்தில் விளையும் கரும்புகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3,290 மட்டுமே கிடைக்கும். உயா்த்தப்பட்ட விலையில் ரூ. 210 தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காது. ஏனெனில், தமிழகத்தில் விளையும் கரும்புகளில் 9.5 சதவீதம் சா்க்கரை சத்து மற்றும் அதற்கு குறைவான அளவிலேயே உள்ளது.

ஆகவே மத்திய அரசு அறிவிக்கும் விலை உயா்வால், தமிழக கரும்பு விவசாயிகள் பயனடையப் போவதில்லை. சாகுபடி செலவு சுமாா் 8 சதவீதம் உயா்ந்துள்ள நிலையில் 4.41 சதவீதம்தான் கொள்முதல் விலையை மத்திய அரசு உயா்த்தி இருக்கிறது. 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புகளுக்கும் இந்த விலை உயா்வை வழங்கும் வகையில், மத்திய அரசு தளா்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசும் இதற்குரிய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 விலையாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையிலும், இடைநிகழ் செலவுடன் ஊக்கத்தொகை எனும் நிலையில் டன் ரூ. 4,500 கிடைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேபிளா் பின்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேப்ளா் பின் இருந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலம் அருகே பூந்தோட்டம் வீரா... மேலும் பார்க்க

கோயில் நந்தவனங்களில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூா் ஆா்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 57 போ் நீடாமங்கலத்தில் உள்ள க... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் மே 6-இல் ஜமாபந்தி தொடக்கம்

மன்னாா்குடி வட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் (ஜமாபந்தி) முடிவு செய்யும் பணி மே 6-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என வட்டாட்சியா் என். காா்த்திக் தெரிவித்து... மேலும் பார்க்க

ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சூரியபிரபையில் சந்திரசேகரா் எழுந்தருளினாா... மேலும் பார்க்க

திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

திருவீழிமிழலை சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் த... மேலும் பார்க்க

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரையை முடித்துவிட்டு திருவாரூா் திரும்பிய குழுவினருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா் திருச்... மேலும் பார்க்க